சேலத்தில் ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் வருகிற ஆகஸ்டு மாதம் 22-ந் தேதி முதல் தொடங்கி செப்டம்பர் மாதம் 2-ந் தேதி வரை சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் கூறுகையில்,
இந்த ஆள் சேர்ப்பு முகாமில் சேலம், கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, மதுரை, தேனி ஆகிய 11 மாவட்டங்களில் இருந்து தகுதிவாய்ந்த இளைஞர்கள் பங்கேற்கலாம்.
சோல்ஜர் டெக்னிக்கல், நர்சிங் அசிஸ்டென்ட், ஜெனரல் டியூட்டி, கிளார்க் மற்றும் ஸ்டோர் கீப்பர், டிரேட்ஸ்மேன் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் ஆன்லைனில் ஜூலை 8-ந் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
ஆகஸ்டு மாதம் 10-ந் தேதிக்கு பின் தகுதியான நபர்களுக்கு இந்த http://joinindianarmy.nic.in/index.htm இணையதளத்தில் அனுமதி சீட்டு வழங்கப்படும்.
Kaninikkalvi.blogspot.com
இந்த ஆள்சேர்ப்பு முகாமில் கலந்துகொள்ள உள்ள இளைஞர்கள் எவ்வித இடைத்தரகர்களையும் நம்ப வேண்டாம் எனவும், தகுதியின் அடிப்படையில் மட்டுமே இப்பணிக்கான நபர்கள் தேர்வுசெய்யப்பட உள்ளதாகவும் ஆட்சியர் அறிவுறுத்தினார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.