10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி யூடியூப் சேனல் மூலமாக பயிற்சி - அமைச்சர் செங்கோட்டையன் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, March 28, 2020

Comments:0

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி யூடியூப் சேனல் மூலமாக பயிற்சி - அமைச்சர் செங்கோட்டையன்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பிளஸ் - 2 விடைத்தாள் திருத்தும் பணி குறித்து 3 வாரங்களுக்கு பிறகு முடிவு அமைச்சர் கே . ஏ . செங்கோட்டையன் தகவல் . ஈரோடு மாவட்டம் நம்பியூர் தாலுகாவுக்கு உட்பட்ட நம்பியூர் , எலத்தூர் பேரூராட்சிகள் மற்றும் தேசிய தரச்சான்றிதழ் பெற்ற நம்பியூர் ஆரம்ப சுகாதார நிலையம் , ஊராட்சி ஒன்றிய அலு வலகம் ஆகிய இடங்களில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே . ஏ . செங்கோட்டையன் நேற்று திடீர் ஆய்வு செய்தார் . பின் னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது : தமிழகத்தில் 1 - ம் வகுப்பு முதல் 9 - ம் வகுப்பு வரையான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது . பொதுமக்கள் அரசின் உத்தரவை கடைபிடித்து 21 நாட்கள் அரசுக்கு முழு ஒத்து ழைப்பு வழங்கவேண்டும் . காலம் , நேரம் கருதாது மக்கள் பணியாற்றி வரும் டாக்டர்கள் , செவிலியர்கள் , மருந்து வணி கர்கள் , உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பத்திரிகை நிருபர்க ளுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கி றேன் . மனநலம் குன்றியோர் , சாலையோரம் வசிப்பவர்கள் என அனைவருக்கும் உணவுகள் வழங்க தயார் செய்து கொண்டி ருக்கிறோம் . தொடர்ந்து அனைத்து இடங்களிலும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது . தனியார் பள்ளிகள் கட்டணங்களை செலுத்த கட்டாயப்படுத்தப்படுவது சம்பந்த மாக இதுவரை எங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கப்பெற வில்லை . அதுபோல் இருந்தால் உரிய நடவடிக்கை எடுத்து சுற்றறிக்கைகள் வழங்கப்படும் . தொழில் வரி , சொத்து வரி செலுத்துவது குறித்து முதல் - அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் . 21 நாட்கள் ( 3 வாரங்கள் ) தடை உத்தரவு முடிந்த பிறகு தான் பிளஸ் - 2 விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும் . இவ்வாறு அமைச்சர் கே . ஏ . செங்கோட்டையன் கூறினார் .
கல்விச் சேனல் மற்றும் அதன் யூட்டியூப் தளத்தின் மூலம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் மாணவர்கள் அதனை பயன்படுத்திக் கொள்ளுமாறும் அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 38-லிருந்து 40-ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தமிழகத்தில் நேற்று முன்தினம் வரை 38 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று புதிதாக மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 40ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஆனால் 12-ம் வகுப்பு தேர்வுகள் முடிவடைந்துவிட்டது. ஆனால் 10-ம் வகுப்பு தேர்வுகள் இன்னும் ஆரம்பிக்க கூட இல்லை. மார்ச் 27ஆம் தேதி தொடங்கவிருந்த 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஊரடங்கு உத்தரவு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் பகுதியில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது; இணையவழி மற்றும் கல்விச் சேனல் மூலம் பொதுத்தேர்வுக்கான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. மேலும் யூடியூப் மூலம் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மாணவர்கள் அனைத்து பயிற்சிகளையும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews