குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்படாது - TNPSC அறிவிப்பு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, January 30, 2020

Comments:0

குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்படாது - TNPSC அறிவிப்பு.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்படாது, தேர்வு எழுதியோர் கவலைப்பட வேண்டாம் என டிஎன்பிஎஸ்சி விளக்கம் தெரிவித்துள்ளது. குரூப்-4 விவகாரத்தில் அடுத்த கட்ட பணிகள் நிறுத்தம் என வெளியான தகவலில் உண்மையில்லை எனவும் தெரிவித்துள்ளது.
குரூப் 4 விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி , முறைகேடுகளில் தொடர்புடைய அதிகாரிகள் , அரசு ஊழியர்கள் , தேர்வர்கள் , புரோக்கர்கள் என 14 பேரை கைது செய்துள்ளனர் . முறைகேட்டில் தொடர்புடைய 99 தேர்வர்களை தகுதி நீக்கம் செய்ய தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடவடிக்கை எடுத்து வந்தது .
இதில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீஸ் விசாரணையில் தெரிய வருவதால் , தகுதிநீக்கம் செய்ய வேண்டியவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயரும் எனக் கூறப்படுகிறது . இதனால் , ஒட்டுமொத்தமாக குரூப் 4 தேர்வை ரத்து செய்வது குறித்து , தேர்வாணையம் ஆலோசித்து வருகிறது . இதுகுறித்து முக்கிய முடிவு எடுப்பது தொடர்பாக , அமைச்சர் ஜெயக்கு மார் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதன் பின்னர் பேட்டி அளித்த அமைச்சர் "குரூப் 4 தேர்வுகள் ரத்து செய்யப்படாது. தவறு செய்தவர்கள் மட்டுமே தண்டிக்கப்படுவர்" என்று தெரிவித்தார்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews