இளம் தளிர்களின் பசுமை முயற்சி: பள்ளி முடிந்ததும் பனை விதை நடவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, November 25, 2019

Comments:0

இளம் தளிர்களின் பசுமை முயற்சி: பள்ளி முடிந்ததும் பனை விதை நடவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
கோவை மாவட்டம் செஞ்சேரிப்புத்துார் அரசு துவக்கப்பள்ளி மாணவர்கள், பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது, பனை விதை நடவில் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன் கூறியதாவது:மாணவர்களுக்கு வளரும் பருவத்தில் விதைக்கும் அறிவுரைகள், செயல்பாடுகள்தான், அவர்களை நல்வழிப்படுத்தும். அதன்படி, மாணவர்களுக்கு தண்ணீர் சிக்கனம், மரம் வளர்ப்பு, புத்தகம் வாசிப்பு உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சில தினங்களாக மழை பெய்து வருவதால், 2 ஆயிரம் பனை விதை நடவு செய்ய தீர்மானித்தோம். மாலை பள்ளி முடிந்ததும், தினசரி, 100 என்ற இலக்குடன் பனை விதைகள் நட்டு வருகின்றனர். இதுவரை, 700 பனை விதைகள் நட்டுள்ள நிலையில், இன்னும் சில தினங்களில், இலக்கை எட்டி விடுவோம். மாணவர்களின் பெற்றோரும் முழு ஒத்துழைப்பு தருவது, மேலும் மகிழ்ச்சி அளிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews