கல்வி கொள்கையால் சீர்கேடு மாஜி துணைவேந்தர் ஆதங்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, November 25, 2019

Comments:0

கல்வி கொள்கையால் சீர்கேடு மாஜி துணைவேந்தர் ஆதங்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
''தாராளமய பொருளாதாரக் கொள்கையின் விளைவாக கல்வியில் சீர்கேடு ஏற்பட்டுள்ளது'' என்று மனோண்மணியம் பல்கலையின் முன்னாள் துணை வேந்தர் தெரிவித்துள்ளார். திருச்சியில் பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற மனோண்மணியம் பல்கலையின் முன்னாள் துணை வேந்தர் வசந்திதேவி கூறியதாவது: கல்வியின் பாதுகாப்பில் தான் தேசத்தின் பாதுகாப்பு உள்ளது. பள்ளிக் கல்வியை சிதைத்து நாசப்படுத்துவதற்கான முயற்சி மிகத் தீவிரமாக நடக்கிறது. தாராளமய பொருளாதாரக் கொள்கையின் விளைவாக கல்வியில் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகள் முழுக்க முழுக்க வணிகமயமாக செயல்படுகின்றன. அரசு பொதுப்பள்ளிகள் அதிகாரிகள் ஆதிக்கத்தில் சிக்கியுள்ளது. அரசும் கல்விப் பொறுப்புகளை உதறித் தள்ளிக் கொண்டிருக்கிறது. தேசிய கல்விக் கொள்கையில் மாற்றங்கள் வேண்டும் என்று ஒரு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. உலக நாடுகளின் கல்வி அமைப்பை போல் அனைத்து குழந்தைகளுக்கும் சமமான இலவசமான தாய்மொழிக் கல்வி வழங்கப்பட வேண்டும். கல்விக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளது. இதற்காக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 28 மாவட்டங்களில் பிரச்சார குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பள்ளிக் குழந்தைகளுக்கான பொதுத் தேர்வுகள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள். இந்த குற்றங்கள் தண்டிக்கப்பட வேண்டும். தற்போது தனியார் பள்ளிகள் கொள்ளையடிப்பதற்கான அனைத்து சுதந்திரமும் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை கட்டுப்படுத்துவதற்கான எந்த வரையறையும் கிடையாது. இவையெல்லாம் மாற்றப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews