மாணவர்கள் பழைய பஸ் பாசிலேயே அக்டோபர் வரை இலவசமாக பயணிக்கலாம்: போக்குவரத்து கழகம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 25, 2019

Comments:0

மாணவர்கள் பழைய பஸ் பாசிலேயே அக்டோபர் வரை இலவசமாக பயணிக்கலாம்: போக்குவரத்து கழகம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'மாணவர்கள் பழைய பஸ் பாசிலேயே அக்டோபர் மாதம் வரை இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம்' என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.தமிழக அரசு பஸ்களில் மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இலவச மற்றும் சலுகை கட்டண பஸ் பாஸ்கள் வழங்கப்படுகின்றன. கல்வியாண்டின் துவக்கத்திலேயே வழங்கப்படும் இவை இரண்டாண்டுகளாக கல்வியாண்டின் இறுதியில் வழங்கப்படுகிறது.'கியூ.ஆர்.கோடு'டன் அசல் தன்மையை உறுதி செய்யும் வில்லைகள் பொருத்திய பஸ் பாஸ்கள் வழங்குவதால் இந்த தாமதம் ஏற்படுவதாக போக்குவரத்து துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.மேலும் புதிய பஸ் பாஸ்கள் வழங்கப்படும் வரை பழைய பஸ் பாசை காட்டியோ கல்வி நிறுவனங்கள் வழங்கிய சுய அடையாள அட்டையை காட்டியோ பயணிக்கலாம் எனவும் பலமுறை விளக்கமளித்துள்ளார்.
ஆனாலும் நடத்துனர்கள் 'பஸ் பாஸ்' இல்லாத மாணவர்களை மிரட்டி டிக்கெட் எடுக்க வைப்பது பஸ்சில் ஏற்றாமல் செல்வது அபராதம் விதிப்பது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபடுவதாக மாணவர்களும் ஆசிரியர்களும் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.சென்னையில் இம்மாதம் 9ம் தேதி மாநகர பஸ்சில் பயணித்த பள்ளி மாணவரை டிக்கெட் கேட்டு போக்குவரத்து பணிமனைக்கு அழைத்துச் சென்று தாக்கியதாக மாதவரம் போலீசில் மாணவரின் தாய் புகாரளித்தது பரபரப்பானது.இந்நிலையில் சென்னை மாநகர போக்கு வரத்துக் கழகத்தின் சார்பில் நடத்துனர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் மாணவர்களின் சீருடை, பழைய பஸ் பாஸ், அடையாள அட்டை இருந்தால் அவர்களை அக்டோபர் மாதம் வரை இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிக்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews