5ம் வகுப்பு மாணவிக்கு இழப்பீடு கோரி வழக்கு: அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, September 29, 2019

Comments:0

5ம் வகுப்பு மாணவிக்கு இழப்பீடு கோரி வழக்கு: அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசுப்பள்ளி கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததில் படுகாயமடைந்த ஐந்தாம் வகுப்பு மாணவிக்கு 40 லட்சம் இழப்பீடு கேட்டு தாக்கல் செய்த மனுவுக்கு அக்டோபர் 1ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு பள்ளிக்கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நாமக்கல் மாவட்டம், பொட்டிரெட்டிபட்டி அரசு தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தவர் காயத்ரி. கடந்த ஜூலை 4ம் தேதி கழிப்பறைக்குச் சென்ற அவர் மீது, சுவர் இடிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்தார்.அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும், சிறுமி முழுமையாக குணமடையவில்லை. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அதிக செலவு ஏற்படும் என்பதால், தன் மகளுக்கு 40 லட்சம் இழப்பீடு வழங்க கோரி, சிறுமியின் தந்தை செல்வவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அரசுப் பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை எனவும், அரசின் அக்கறையின்மை, கவனக்குறைவு காரணமாகவே தன் மகளுக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தன் மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், அக்டோபர் 1ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, பள்ளிக்கல்வித்துறை செயலாளர், நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews