👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
மருத்துவப்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், தற்போது பணியாற்றும் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மருத்துவப்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், தற்போது பணியாற்றும் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
ராணுவத்தில் தற்போது பணிபுரிபவர்களின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி குறளரசன் என்ற மாணவர் மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், முன்னாள் ராணுவத்தினர், இந்நாள் ராணுவத்தினர் என்று பாராபட்சம் காட்டக்கூடாது என்று தெரிவித்தனர். மேலும், மருத்துவப்படிப்புகளில் இட ஒதுக்கீட்டு பரிவில் தற்போது பணியில் உள்ள ராணுவ வீரர்களின் வாரிசுகளையும் சேர்க்க வேண்டும் என்றும், நடப்பு கல்வியாண்டு முதல் மருத்துவப் படிப்புகளில் ராணுவ வீரர்களின் வாரிசுகளை சேர்க்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.
முதுநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வில் கட் ஆப் மதிப்பெண்களை 6% குறைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தேர்வு வாரியம், இந்திய மருத்துவக் கவுன்சில் நிர்வாகிகளுடன் மத்திய சுகாதார நல அமைச்சகம் ஆலோனை நடத்தியது. அதன்பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டில் இருந்து திருத்தியமைக்கப்பட்ட புதிய கட் ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் அட்மிஷன் நடைபெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U