👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
ஐஎஸ்சி தேர்வு முடிவுகளில் முதலிடம் பிடித்த கர்நாடகாவைச் சேர்ந்த விபா சுவாமிநாதன் என்ற மாணவியும் கொல்கத்தாவைச் சேர்ந்த தேவங் குமார் அகர்வால் என்ற மாணவரும் 400/400 எடுத்து சாதனை படைத்துள்ளனர்.
சிஐஎஸ்சிஇ அறிவித்த ஐஎஸ்சி தேர்வு முடிவுகளில் முதலிடம் பிடித்த இருவர் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 400க்கு 400 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
சிஐஎஸ்சிஇ எனப்படும் இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் ஒன்றியம் நடத்திய ஐஎஸ்சி (12ஆம் வகுப்பு) தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியாகின. இதில் ஒரு மாணவரும் ஒரு மாணவியும் 400க்கு 400 மதிப்பெண்கள் பெற்று நாட்டிலேயே முதல் இடத்தைப் பெற்றனர்.

கர்நாடகாவைச் சேர்ந்த விபா சுவாமிநாதன் என்ற மாணவியும் கொல்கத்தாவைச் சேர்ந்த தேவங் குமார் அகர்வால் என்ற மாணவரும் 400/400 எடுத்து சாதனை படைத்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன் வெளியான சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் முதல் இடம்பிடித்தவர்கள் 500க்கு 499 மதிப்பெண் எடுத்து நூலிழையில் ஒட்டுமொத்த சென்டம் வாய்ப்பை இழந்தனர்.
ஐஎஸ்சி தேர்வில் இரண்டாவது இடத்தில் 16 மாணவ மாணவியர் இருக்கின்றனர். அவர்கள் 400க்கு 399 மதிப்பெண்களை வாங்கியுள்ளனர். மூன்றாம் இடத்தைப் பிடித்த 36 பேர் 400க்கு 399 மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
இந்த ஐஎஸ்சி தேர்வு முடிவுகள் பற்றி கருத்து கூறிய முன்னாள் என்சிஇஆர்டி இயக்குநர் கிருஷ்ண குமார், "கடந்த ஆண்டுகளில் தொடர்ந்து பல மாணவர்கள் மிக அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவது மிகவும் கவலைக்குரியது" என்று குறிப்பிட்டுள்ளார். கேள்வித்தாள் தயாரிப்பு மற்றும் மாதிரி வினாத்தாள் அமைப்பு மற்றும் விடைத்தாள் திருத்தும் பணியில் ஏற்படும் தவறுகளே இதற்குக் காரணம் எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U