👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
கர்நாடக மாநிலத்தில் ரயில் தாமதமானதால் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுதவில்லை. மேற்கு வங்க மாநிலத்திலும் விரும்பிய மொழியில் வினாத்தாள் வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

மூன்று மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் மே 20ஆம் தேதி நீட் தேர்வு எழுத உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
எம்.பி.பி.எஸ். முதலான இளநிலை மருத்துவ பட்டப் படிப்புகளில் சேர தேசிய அளவில் நடத்தப்படும் நீட் (NET UG) நுழைவுத் தேர்வு இந்த ஆண்டு மே 5ஆம் தேதி நடைபெற்றது. வங்கக் கடலில் உருவான ஃபானி புயலால் ஒடிசாவில் கரையைக் கடந்ததால், அந்த மாநிலத்தில் மட்டும் நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.
மற்ற மாநிலங்களில் முன்னர் அறிவித்தபடியே நீட் தேர்வு மே 5ஆம் தேதி நடந்து முடிந்திருக்கிறது. அன்று கர்நாடக மாநிலத்தில் ஹம்பி எக்ஸ்பிரஸ் 8 மணி நேரம் தாமதமானதால் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுதவில்லை. மேற்கு வங்க மாநிலத்திலும் சிலிகுரியில் உள்ள தேர்வு மையத்தில் மாணவர்களுக்கு அவர்கள் விரும்பிய மொழியில் வினாத்தாள் வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பில் மறு வாய்ப்பு வழங்க கோரிக்கை எழுந்தது.
இதனையடுத்து, ஒடிசா, கர்நாடாகா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் வரும் மே 20ஆம் தேதி நீட் தேர்வு நடக்கும் என் என்.டி.ஏ. அறிவித்தது. தேர்வு மையங்கள் மாற்றப்படுவதால் இதற்கான புதிய அட்மிட் கார்டை டவுன்லோட் செய்துகொள்ளுமாறு மாணவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்தில் நீட் தேர்வு நடக்கம் மே 20ஆம் தேதியே கர்நாடகா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் தேர்வு எழுத முடியாமல் போன மாணவர்களும் நீட் தேர்வு எழுத அனுமதி வழங்குவதாக உத்தரவிடப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U