ஆபரேஷன் இ ஆய்வு தகவல் கசிவால் சர்ச்சை! முன்கூட்டியே அலர்ட் ஆகும் பள்ளிகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, February 22, 2019

ஆபரேஷன் இ ஆய்வு தகவல் கசிவால் சர்ச்சை! முன்கூட்டியே அலர்ட் ஆகும் பள்ளிகள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
மதுரையில் கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் நடக்கும் ஆபரேஷன் இ ஆய்வு குறித்து முன்கூட்டியே பள்ளிகளுக்கு தகவல் கசிவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
ஒரே நாளில் ஒரு கல்வி ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் முதன்மை கல்வி அதிகாரி முதல் பி.இ.ஓ.,க்கள் வரையான 10க்கும் மேற்பட்ட கல்வி அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொள்ளும். இதையொட்டி இறைவணக்கத்திற்கு முன் பள்ளிக்கு செல்லும் இக்குழு அனைத்து அன்றாட நடவடிக்கை, கற்றல் கற்பித்தல், மாணவர் வாசிப்பு, எழுதும் திறனை கண்காணித்து மாணவர்களுக்கு சிறப்பு தேர்வும் நடத்தும். ஆசிரியர் வராதது, கற்பித்தல் குறைபாடு இருக்கும் பட்சத்தில் தலைமையாசிரியரிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
சி.இ.ஓ., சுபாஷினி பொறுப்பேற்றது முதல் இந்த ஆய்வு மீண்டும் துவங்கியது.பிப்., 21 ல் மேற்கு கல்வி ஒன்றியத்தில் நடந்த ஆய்வின் போது சி.இ.ஓ., மற்றும் டி.இ.ஓ.,க்கள் பங்கேற்கவில்லை. பி.இ.ஓ.,க்கள், ஆசிரியர் பயிற்றுனரே பங்கேற்றனர். பெரும்பாலான பள்ளிகளுக்கு இந்த ஆய்வு குறித்து முன்கூட்டியே தகவல் கிடைத்ததால் பெயரளவிலேயே ஆய்வு நடந்தது. தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், &'&'பிளஸ் 2 தேர்வுக்கான வினாத்தாள் கொண்டுவரப்பட்டதால் சி.இ.ஓ., டி.இ.ஓ.,க்கள் பங்கேற்கவில்லை. ஆய்வு நடக்கும் தகவல் கசிந்ததால் சம்மந்தப்பட்ட பள்ளிகள் உஷார் ஆகிவிடுகின்றன. ரகசியம் காக்கப்பட்டால் தான் ஆய்வு பலன் அளிக்கும். சி.இ.ஓ., இதில் கவனம் செலுத்த வேண்டும்,&'&' என்றார்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews