பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு வினாத்தாள் போலீஸ் பாதுகாப்புடன் வந்தன : நோடல் மையங்களுக்கு அனுப்பி வைப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, February 22, 2019

பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு வினாத்தாள் போலீஸ் பாதுகாப்புடன் வந்தன : நோடல் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
பிளஸ் 1, பிளஸ் 2 பொதுதேர்வுக்கான வினாத்தாள் கட்டுகள் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்ட வினாத்தாள்களை நோடல் மையங்களுக்கு அனுப்பும் பணி தொடங்கியது. 2018-19ம் கல்வியாண்டிற்கான 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு, மார்ச் மாதம் நடக்கிறது. பிளஸ்2 தேர்வு மார்ச் 1ல் தொடங்கி 19ல் நிறைவுபெறுகிறது. பிளஸ்1 தேர்வு மார்ச் 6ல் தொடங்கி 22ல் முடிகிறது. இதேபோல் 10ம் வகுப்பு ேதர்வு, மார்ச் 14ல் தொடங்கி 29ல் முடிகிறது. நெல்லை மாவட்டத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வை 36 ஆயிரத்து 510 பேர் எழுதுகின்றனர். 12ம் வகுப்பு பொதுத்தேர்வை 39 ஆயிரத்து 457 பேர் எழுதுகின்றனர்.
பிளஸ்1 வகுப்பில் 162 மாற்று திறனாளிகளும், பிளஸ்2ல் 148 மாற்றுத்திறனாளிகளும் தேர்வு எழுதுகின்றனர். நெல்லை மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 5 கல்வி மாவட்டங்களில் 167 தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் 45 ஆயிரத்து 386 பேர் எழுதுகின்றனர். பாளை. மத்திய சிறையில் உள்ள தேர்வு மையத்தில் 15 நபர்கள் தேர்வு எழுதவுள்ளனர், தேர்வுக்காக முதற்கட்டமாக பிளஸ்1, பிளஸ்2 வினாத்தாள் கட்டுகள் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கன்டெய்னர் லாரிகளில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. நெல்லை மாவட்டத்திற்குரிய பிளஸ் 1, பிளஸ் 2 வினாத்தாள் கட்டுகள் இரண்டு கன்டெய்னர் லாரிகளில் பாளை கிறிஸ்துராஜா பள்ளியில்் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையத்திற்கு (நோடல் சென்டர்) வந்தன.
அவற்றை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலா மற்றும் நேர்முக உதவியாளர்கள் நாராயணன், டைட்டஸ், கல்வித்துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர். பின்னர் இங்கிருந்து நெல்லை, தென்காசி, சேரன்மகாதேவி, சங்கரன்கோவில், வள்ளியூர் ஆகிய 5 கல்வி மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள 10 நோடல் மையங்களுக்கும் தேவையான வினாத்தாள் கட்டுகள் பிரித்து எடுக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. அந்தந்த நோடல் மையங்களில் பூட்டி சீல் வைக்கப்பட்ட அறைகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வினாத்தாள் கட்டுகள் வைக்கப்பட்டன. தேர்வு வரை அந்த அறை முன் துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் இருப்பர். கண்காணிப்பு கேமராவும் அமைக்கப்பட உள்ளது. விரைவில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் கட்டுகளும் வரஉள்ளன.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews