தனியார் மருத்துவக் கல்லூரி இடங்களை நீட் மதிப்பெண் அடிப்படையில் நிரப்பலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, May 26, 2018

Comments:0

தனியார் மருத்துவக் கல்லூரி இடங்களை நீட் மதிப்பெண் அடிப்படையில் நிரப்பலாம்



 

அரசு உதவி பெறாத தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பட்டமேற்படிப்புக்கு காலியாக உள்ள இடங்களுக்கு நீட் தேர்வு மதிப்பெண் கொண்டு மாணவர் சேர்க்கை நடத்தலாம் என்ற பரிந்துரைக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.

உத்தரப் பிரதேச அரசு உதவிபெறாத மருத்துவக் கல்லூரிகள் நலச் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின்போது, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த ஒப்புதலை அளித்தது.

அந்த மனு மீதான விசாரணையின்போது, 2018-19 கல்வியாண்டில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு உதவிபெறாத தனியார் கல்லூரிகளில் பட்டமேற்படிப்புக்கான 41.95 சதவீத இடங்கள் காலியாக இருப்பதாக இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்தது. 
Kaninikkalvi.blogspot.in 
மேலும், அந்தக் காலியிடங்களுக்கு நீட் தேர்வு மதிப்பெண் கொண்டு மாணவர் சேர்க்கை நடத்த உத்தரப் பிரதேச மருத்துவக் கல்வி இயக்குநர் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அந்தக் கவுன்சில் பரிந்துரைத்தது. அதனை ஏற்ற நீதிபதிகள் அமர்வு, அத்தகைய நடவடிக்கையை வரும் 31-ஆம் தேதிக்குள்ளாக மேற்கொள்ள உத்தரப் பிரதேச மருத்துவக் கல்வி இயக்குநருக்கு உத்தரவிட்டதுடன், மருத்துவக் கல்லூரிகள் நலச் சங்கத்தின் மனுவை தள்ளுபடி செய்தது. 

இந்நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த், நீதிபதிகள் அமர்வு விரும்பும் பட்சத்தில் இதர மாநிலங்களிலும் இதே நடைமுறையை பின்பற்ற அனுமதிக்கலாம் என்று பரிந்துரைத்தார். எனினும், கட்-ஆஃப் தேதியாக வரும் 31-ஆம் தேதி வரை மட்டுமே அனுமதிக்கவும் அவர் பரிந்துரைத்தார்.

அந்தப் பரிந்துரையை ஏற்ற நீதிபதிகள்அமர்வு, 'இந்தப் பரிந்துரை பொருத்தமான ஒன்று. இது, தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை பற்றாக்குறையை தீர்ப்பதுடன், இதர மருத்துவக் கல்லூரிகளில் வாய்ப்பு கிடைக்காத மாணவர்களுக்கு நல்லதொரு வாய்ப்பாகவும் இருக்கும்' என்று தனது உத்தரவில் குறிப்பிட்டது.
Kaninikkalvi.blogspot.in 
இந்த விவகாரம் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவு இந்திய மருத்துவ கவுன்சில், மருத்துவ கலந்தாய்வு குழு, சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலும், இந்திய மருத்துவ கவுன்சில் வழக்குரைஞரும் நீதிபதிகளிடம் உறுதியளித்தனர்.
 



No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews