வேளாண் படிப்பு: 15,895 பேர் விண்ணப்பம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, May 26, 2018

Comments:0

வேளாண் படிப்பு: 15,895 பேர் விண்ணப்பம்



தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் இதுவரை 15,895 பேர் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், உணவு - ஊட்டச்சத்து அறிவியல் உள்ளிட்ட 12 பட்டப் படிப்புகளுக்கான 3,422 இடங்களுக்கு 2018-19 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறை மே 18 ஆம் தேதி தொடங்கும் என்று துணைவேந்தர் கு.ராமசாமி அறிவித்திருந்தார்.kaninikkalvi.
அதன்படி, பிளஸ் 2 அறிவியல் பிரிவில் பயின்ற மாணவர்கள் மே 18 ஆம் தேதி முதல் ஜூன் 17 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை அனுப்பலாம் என்றும் ஜூன் 18 ஆம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. வெள்ளிக்கிழமை (மே 25) பிற்பகல் வரையிலும் 6,797 மாணவர்களும், 9,098 மாணவிகளும் என மொத்தம் 15,895 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
  

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews